| | | | பாயிரவியல் | நீத்தார் பெருமை | | | | |
|
| | | | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | 21. | | | | |
|
| | | | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | 22. | | | | |
|
| | | | இருமை வகைதொந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | 23. | | | | |
|
| | | | உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | 24. | | | | |
|
| | | | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் காரி. | 25. | | | | |
|
| | | | செயற்காரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்காரிய செய்கலா தார். | 26. | | | | |
|
| | | | சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரி வான் கட்டே உலகு. | 27. | | | | |
|
| | | | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். | 28. | | | | |
|
| | | | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது. | 29. | | | | |
|
| | | | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | 30. | | | | |
|